Wednesday, July 10, 2024

Education in Tamil literature - தமிழ் இலக்கியங்களில் கல்வி

 

 

கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் 
‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல்.

 கல்வி:

கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல். மனதில் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்பவல்லது கல்வி.

 மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும்.


எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.              
சுவாமி விவேகானந்தர்

கல்வி கற்றவரின் சிறப்பு
:அழியாத செல்வமாகிய கல்வியைக் கற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர் ஆவார்கள்.

“மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னலில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்கு
தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை: கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு”


ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னனை விட, குற்றமில்லாமல் கல்வி கற்றவன் சிறப்புடையவன். ஏனெனில், மன்னனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கல்வி கற்றவர்களால் மட்டுமே வாழமுடியும் எனில் மிகையல்ல.

' கல்வியைப் பதித்து வைத்த இடத்திலிருந்து யாராலும் கவர்ந்துவிட முடியாது, தக்கவர்க்குக் கொடுப்பதனால் குறைவுபடாது. செல்வத்தைப் பறித்துக் கொள்ளும் அரசராயினும், பிறராயினும் அதனைக் கவர்ந்துக் கொள்ள முடியாது. எனவே ஒருவன் தனது மக்களுக்குப் பின்னர் தேவைப்படும் எனத் தேடிவைத்துச்; செல்ல வேண்டியது பொருட்செல்வமன்று. அதனைவிட உயர்ந்த கல்விச் செல்வமே.

'எச்சமென ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற" (134)
என்பது நாலடியார் தரும் கருத்து.

 இக்கல்வியானது,
'வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வி யென்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள் தேடி
உழல்வதென்னே" (69)

'என்பது விவேகசிந்தாமணி பாடல்

'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” (183)

என்று புறநானூறும்,

'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை வருக என்பர்” (38)

என்று வெற்றிவேற்கையும்
கற்றவர்கள் எக்காலத்தும் மதிக்கப்பட்டார்கள் என்பதை உணர்த்துகின்றன. கற்றவர்களை அரசன் விரும்பி ஏற்பான்; கற்றவர்கள் பார்வையில் சாதியில்லை; மதமில்லை; இனமில்லை; கீழோர் மேலோர் என்ற வேறுபாடில்லை; சமமாக மதிக்கும் மாண்பே அவர்களுடையது என்பது பெறப்படுகிறது.

எத்தகைய அறிஞனாயினும், பெரியோராயினும் ஆற்றைக் கடக்க நினைப்பவர்கள் தோணியில் செல்லும் போது தோணியோட்டி எந்தச் சாதி, எந்த இனம், எந்த மதம், எந்த நாடு, எந்த மொழி என்று பார்ப்பதில்லை. அவன் துணை கொண்டே அந்த ஆற்றைக் கடக்கின்றனர். ஏனெனில் அவன் அத்தொழிலைக் கற்றவன், கற்றவர்க்கு என்றைக்கும் மதிப்புண்டு. கல்வி இளையவர் என்றோ முதியவர் என்றோ, ஆண் என்றோ பெண் என்றோ பார்ப்பதில்லை. அது எல்லோரையும் சமமாக இணைத்து எழுச்சி கொள்ள வைக்கிறது.

'கற்றோர்க்குத் தம்மூர் என்று ஊரில்லை" 
என்று நான்மணிக்கடிகையும்,

'இளமையில்கல்" என்று ஒளவையும் மொழிந்தனர்.

'மன்னர்க்குத் தன்தேச மல்லாற்; சிறப்பில்லை
 கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு" (26)
என்று மூதுரை நல்வழி காட்டுகிறது.

கல்வி கற்காதவர்களின் நிலை:

முறையாக கல்வி கற்காமல் கற்றவர்களைப் போன்று நினைத்தக் கொள்ளும் மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். கல்வி கற்காதவர்களின் நிலையைப் பற்றி,
“கானம் மயில் ஆடக்கண்டு இருந்தவான் கோழி
தானும் அதுஆகப் பாவித்து –தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்றகவி”

மயில் ஆடுவதைப் பார்த்து வான்கோழி ஆடுவதைப் போன்றது கல்வி கற்காதவர்களின் நிலை. கல்வி கற்றவர்கள் ஆழமாக பொருள் விரித்துக் கூறுவர். கல்வி கற்காதவர்கள் பொருள் விரித்துக் கூறும் போது சொற்குற்றமும், பொருள் குற்றமும் இருக்கும் என்கிறார். கல்லாதவர்கள் இகழப் படுவார்கள், புகழப்படமாட்டார்கள்.

“கலைஆகிக் கொம்புஆகிக் காட்டகத்தே நிற்கும்
அவைஅல்ல நல்ல மரங்கள்! – சபைநடுவே
நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்புஅறிய
மாட்டாதவன் நல்மரம்”


கல்விஅறிவும் குறிப்பறியும் குணமும் இல்லாதவர்கள் சிறந்த மரங்களாவர். மரங்களுக்கு கிளை, குறுங்கிளை இருப்பதைப் போல இவர்களுக்கும் கை, கால்கள் இருக்கின்றன. ஆறரிவுடைய மனித இனத்தில் பிறந்தும் கல்வி அறிவும், குறிப்புணரும் குணமும் இல்லாதவர்கள் காட்டிலுள்ள மரங்களுக்கே ஒப்பாவார்கள் என கல்வி கற்காதவர்களின் தோற்றத்தை எடுத்துரைக்கின்றார். கல்வியறிவு இல்லாதவர்கள் கற்றவர்களின் சொற்களை மதித்துக் கேட்க மாட்டார்கள்.


நாலடியார் - 14.கல்வி- 131 முதல் 140 வரை

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே
நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து.

கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.


திருக்குறள் கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


பொருள்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை


திருக்குறள் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

********************************************************

சுவாமி விவேகானந்தரின் பன்முகங்களை விவரிக்கும் வகையிலான கட்டுரைகள்

Friday, June 7, 2024

Man Making Education - மனிதனை உருவாக்கும் கல்வி

 




“Education

is the panacea

for all evils”

Swami Vivekananda.
"கல்வி அனைத்து தீமைகளுக்கும் நோய் தீர்க்கும் மருந்தாகும்"

It was his conviction that only through the right type of education individuals can be transformed. 
It is by imparting man making and character building education an individual becomes a complete man, a responsible citizen which is the need of today’s society.



சுவாமி விவேகானந்தரின் கல்வி -
"உன் உள்ளே உள்ள தெய்விக தன்மையை வெளியே கொண்டுவருதல் கல்வியாகும் ".

எழுமின் விழிமின் உழைமின் பாடல் 

https://www.youtube.com/watch?v=5WwHoJ6MIk8

மனிதனை உருவாக்கும் கல்வி
https://www.youtube.com/watch?v=QmEulsODjMk
பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

https://www.youtube.com/watch?v=QPM413fUHVQ


Swami Vivekananda on Education

“Education is not the amount of information that is put into your brain and runs riot there, undigested, all your life. We must have life-building, man-making, character-making assimilation of ideas.

If you have accumulated five ideas and made them your life and character, you have more education than any man who has got by heart a whole library.… If education is identical with information, the libraries are the greatest sages in the world and encyclopedias are the Rishis.”

“We want that education by which character is formed, strength of mind is increased, the intellect is expanded, and by which one can stand on one’s own feet.”

“What is education? Is it book-learning? No. Is it diverse knowledge? Not even that. The training by which the current and expression of will are brought under control and become fruitful is called education.”

“To me the very essence of education is concentration of mind, not the collecting of facts.”

“My idea of education is personal contact with the teacher — guru-griha-vasa. Without the personal life of a teacher there would be no education. … One should live from his very boyhood with one whose character is like a blazing fire and should have before him a living example of the highest teaching…. In our country, the imparting of education has always been through men of renunciation.… India had all good prospects so long as tyagis (men of renunciation) used to impart knowledge.”

“The education which does not help the common mass of people to equip themselves for the struggle for life, which does not bring out strength of character, a spirit of philanthropy, and the courage of a lion — is it worth the name? Real education is that which enables one to stand on one’s own legs.”

“The old institution of ‘living with the guru’ and similar systems of imparting education are needed. What we want are Western science coupled with Vedanta, Brahmacharya as the guidance motto, and also Shraddha and faith in one’s own self.”





Friday, April 26, 2024

ஆளுமை வளர்ச்சிக்கு தியானம் - சுவாமி விவேகானந்தர்

 




Meditation
for Personality Development,

Swami Vivekananda

ஆளுமை வளர்ச்சிக்கு
தியானம்


“தியானம் என்றால் மனத்தை தன் பக்கம் திருப்புவது . மனம் அனைத்து எண்ண அலைகளையும் நிறுத்துகிறபோது உலகம் நின்றுவிடுகிறது. உங்கள் உணர்வு விரிவடைகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் தியானம் செய்யும் போது உங்கள் வளர்ச்சியை நிலைநிறுத்துவீர்கள்"

-சுவாமி விவேகானந்தர்

“Meditation means the mind is turned back upon itself. The mind stops all the thought-waves and the world stops. Your consciousness expands. Every time you meditate you will keep your growth”

-Swami Vivekananda

சீடர் : சுவாமிஜி தியானத்தின் உண்மையான இயல்பு என்ன?

சுவாமிஜி: தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மனத்தைக் குவியச் செய்வது. மனம் ஒரு பொருளின்மீது ஒருமைப்பட்டு நிலைபெறுமானால் பிறகு அதனை எந்தப் பொருளின் மீதும் குவிக்கலாம்.

சீடர்: உருவத் தியானம் அருவத் தியானம் என்று இரண்டுவகை தியானங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் என்ன? இவற்றுள் எது மேலானது?

சுவாமிஜி:முதலில் மனத்தை ஏதாவது ஒரு பொருளின்மீது குவித்துத் தியானத்தைத் தொடங்க வேண்டும். ஒரு சமயம் நான் என் மனத்தை ஒரு கறுப்புப் புள்ளியின் மீது குவியும்படிச் செய்தேன் . கடைசியில் என்னால் அந்தப் புள்ளியைப் பார்க்க முடியவில்லை: அந்தப் புள்ளி என் முன்னால் இருக்கிறது என்பதைக்கூடக் காண முடிய வில்லை. மனம் வழக்கம்போல் இயங்கவில்லை. மனம் வேலை செய்வதால் எழும் எந்தவிதமான அலையும் எழவில்லை காற்று சிறிதும் வீசாத அசைவே இல்லாத கடல்போல் இருந்தது. அந்த நிலையில் புலன்களைக் கடந்த உண்மையை நான் சிறிது உணர்வதுண்டு. எனவே மிகச் சாதாரண புறப் பொருளின் மீது தியானம் செய்வதுகூட மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். ஆனால் மனத்திற்குப் பிடித்த பொருள் மீது தியானம் செய்யும்போது மனம் மிகவும் எளிதாக அமைதி அடைகிறது என்பதும் உண்மை. இந்த நாட்டில் இத்தனை தெய்வ வடிவங்களை வழிபடுவதற்கு இதுதான் காரணம். இத்தகைய வழிபாட்டிலிருந்து எத்தகைய அற்புதமான கலை வளர்ந்துள்ளது! ஆனால் இப்போது அத்தகைய நிலை இல்லை என்றாலும் உண்மை என்னவென்றால் தியானப்பொருள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க முடியாது என்பதே மக்கள் தாங்கள் எந்தப் புறப்பொருளைத் தியானித்து நிறைநிலையை அடைந்தார்களோ அதை மட்டும் உலகிற்கு போதித்தார்கள். இந்தப்புறப் பொருட்கள் எல்லாம் பூரண மன அமைதியை அடைவதற்கு உதவுபவை மட்டுமே என்றஉண்மையை மறந்து உருவங்களை அளவுகடந்து கொண்டாடினார்கள் வழிகளில் முழுக் கவனத்தையும் செலுத்தினார்களே தவிரஅது சென்று சேரும் முடிவை மறந்து விட்டார்கள் உண்மையில் மனத்தில் அலைகளே இல்லாமல் செய்வது தான் நோக்கம் ஆனால் மனம் ஏதாவது ஒரு பொருளின் மீது ஆழ்ந்து ஒன்றாமல் இதை அடைய முடியாது.

சீடர் :மனம் ஒரு பொருள் மீது முழுமையாக ஆழ்ந்து அதனுடன் ஒன்றிவிட்டால் அது நமக்கு பிரம்மஞானத்தை எப்படித் தரும்?

சுவாமிஜி: தரும் நாம் தியானிக்கும் பொருளின் வடிவத்தை மனம் முதலில் அடைந்தாலும் பிறகு அந்த உணர்வு மறைந்துவிடும் அதன் பிறகு தூய்மையான உண்மை இருப்பின் அனுபவம் எஞ்சும்.

சீடர்: சரி மன ஒருமைப்பாட்டை அடைந்த பிறகும் ஆசைகள் தோன்றுகின்றனவே அது எப்படி?

சுவாமிஜி: அவை சம்ஸ்காரங்களால் உண்டாகின்றன. புத்தர் சமாதியில் ஒன்றப்போகின்ற நேரத்தில் காமன் வெளிப்பட்டான் .காமன் என்று எதுவும் வெளியே உண்மையில் இல்லை முந்தைய சம்ஸ்காரங்களே நிழல் வடிவில் வெளியில் தோன்றியது.

சீடர் : ஆனால் நிறைநிலையை அடையுமுன் பல வகையான பயங்கர அனுபவங்களை அடைய வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவையும் மனத்தின் கற்பனை தானா?

சுவாமிஜி: கற்பனை அல்லாமல் வேறு என்ன? அவை மனத்தின் புறத் தோற்றங்கள் என்பதைச் சாதகன் அந்த வேளையில் அறிவதில்லை மனத்திற்கு வெளியே எதுவும் இல்லை. நீ வெளியே இருப்பதாகக் காண்கின்ற உலகம்கூட வெளியில் இல்லை. எல்லாமே மனத்தின் கற்பனைதான். மனம் அலைகளற்றுப் போகும் போது அது பிரம்ம உணர்வைப் பிரதிபலிக்கிறது அப்போது எல்லா உலகங்களின் காட்சிகளும் ஏற்படலாம். யம் யம் லோகம் மனஸா ஸம்விபாதி – எந்த உலகத்தை காண வேண்டும் என்று நினைக்கிறானோ அதை உடனடியாகக் காண முடியும் அவன் எதை எண்ணுகிறானோ அது உடனே கைகூடும். நினைப்பது நடைபெறுகின்ற இத்தகைய சத்திய சங்கல்ப நிலையை அடைந்த பிறகும் எச்சரிக்கையாக இருந்து எந்த ஆசைகளுக்கும் அடிமையாகாமல் இருப்பவன் பிரம்ம ஞானம் பெறுகிறான். அந்த நிலையை அடைந்த பிறகு வழிதவறியவன் பல்வேறு சித்திகளைப் பெறுவான் ஆனால் அறுதி லட்சியத்திலிருந்து வழுவி விடுவான். இவ்வாறு சொல்லிவிட்டு சுவாமிஜி, சிவ சிவ என்று கூறியபடியே மீண்டும் தொடர்ந்தார்:

வாழ்க்கையின் இந்த மேலான ரகசியத்தைத் தியாகத்தின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும் தியாகம் தியாகம்,தியாகம் இதுவே உங்கள் வாழ்க்கையின் மூல மந்திரம் ஆகட்டும் .

ஸர்வம் வஸ்து பயான்விதம் புவிந்ருணாம் வைராக்யமேவாபயம்

மனிதர்களும் உலகில் உள்ள பொருட்களும் அச்சத்தால் குழப்பட்டிருக்கின்றன வைராக்கியம்(துறவு) மட்டுமே பயமின்மையைத் தரும்.











Tuesday, April 16, 2024

மாணவர் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி - Way to Good Cultured Children

 






- உங்கள் குழந்தைகளுடன் உணவு உண்ணுங்கள்.

விவசாயிகளின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உழைப்பு பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். மேலும் அவர்களின் உணவை வீணாக்காதீர்கள் என்று சொல்லுங்கள்.

- சாப்பிட்ட பிறகு அவர்கள் தங்கள் தட்டுகளை கழுவட்டும். குழந்தைகள் கடின உழைப்பின் மதிப்பை புரிந்துகொள்வார்கள்.

- அவர்கள் உங்களுடன் சமைக்க உதவட்டும். அவர்களுக்காக காய்கறிகள் அல்லது சாலட் தயாரிக்கட்டும்.

- மூன்று அண்டை வீடுகளுக்குச் செல்லுங்கள். அவர்களைப் பற்றி மேலும் அறிந்து, நெருங்கி பழகவும்.

- தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்று குழந்தைகளுடன் பழகட்டும். அவர்களின் அன்பும் உணர்ச்சிபூர்வமான ஆதரவும் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். அவர்களுடன் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

- குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களை உங்கள் பணியிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

- எந்த உள்ளூர் திருவிழா அல்லது உள்ளூர் சந்தையையும் தவறவிடாதீர்கள்.

- சமையலறை தோட்டத்தை உருவாக்க விதைகளை விதைக்க உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கவும். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதும் முக்கியம்.

- உங்கள் குழந்தைப் பருவம் மற்றும் உங்கள் குடும்ப வரலாறு பற்றி குழந்தைகளுக்கு சொல்லுங்கள்.

- உங்கள் குழந்தைகளை வெளியே சென்று விளையாட விடுங்கள், காயப்படுத்தட்டும், அழுக்காகட்டும். எப்போதாவது விழுந்து வலியைத் தாங்கிக் கொள்வது அவர்களுக்கு நல்லது. சோபா மெத்தைகள் போன்ற வசதியான வாழ்க்கை உங்கள் குழந்தைகளை சோம்பேறியாக்கும்.

- அவர்களுக்கு சில நாட்டுப்புற பாடல்களை இசைக்கவும்.

- உங்கள் குழந்தைகளுக்கு வண்ணமயமான படங்களுடன் சில கதைப் புத்தகங்களைக் கொண்டு வாருங்கள்.

- உங்கள் குழந்தைகளை டிவி, மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் எலக்ட்ரானிக் கேஜெட்களிலிருந்து விலக்கி வைக்கவும். இதற்கெல்லாம் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டிருக்கிறார்.

- அவர்களுக்கு சாக்லேட், ஜெல்லி, கிரீம் கேக், சிப்ஸ், காற்றோட்டமான பானங்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் பஃப்ஸ் மற்றும் சமோசா போன்ற வறுத்த உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கவும்.

- உங்கள் குழந்தைகளின் கண்களைப் பார்த்து, உங்களுக்கு இதுபோன்ற அற்புதமான பரிசை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இனி வரும் சில வருடங்களில் அவை புதிய உச்சத்தை எட்டிவிடும்.


அன்னை சாரதா தேவி குழந்தைகள் தினம்

குழந்தைகளுக்கான நல்ல பழக்கங்கள்| Good habits for children


புத்தக வாசிப்பின் மகிமை – Greatness of Reading Books

புத்தகங்களின் முக்கியத்துவத்தின் சில சிறப்புகள்: அறிவு வளர்ச்சி: புதிய தகவல்களையும், உலகளாவிய விஷயங்களையும் அறிய உதவுகிறது. மன அமைதி: கவலைகள...