Showing posts with label Swami Vivekananda Day. Show all posts
Showing posts with label Swami Vivekananda Day. Show all posts

Sunday, May 17, 2026

SV Day Personality Development Programmes - Year 2025-26


S.No

Details of the Programmes

 

Date

1

Achchuveli Primary School    - 7.30 am to 9.00 am   

https://rkmceylon.blogspot.com/2025/05/

20-05-2025  

2

Achuveli Central College        9.30 am 11.00 am

20-05-2025   

3

Velanai Central College 7.30am to 11.30 am

23-05-2025  

4

Pungudutivu  Central College      10.00 a m to 11.30 am 

23-05-2025  

5

Ramakrishna Mission Welfare Centre, Urumpirai      4.00 to 6.00 pm

24-05-2025  

6

Swami Vivekananda Welfare Centre, Kilinochchi       9.00 am

25-05-2025  

7

Palaly North Govt. Tamil Mixed School - Guided Meditation

https://rkmceylon.blogspot.com/2026/05/palaly-north-govt-tamil-mixed-school.html

09-07-2025

 

8

Ramakrishna Mission Welfare Centre, Urumpirai     

26-10-2025  

9

College of Education, Jaffna

https://rkmceylon.blogspot.com/2025/10/swami-vivekananda-day-programme-in.html

27-10-2025

 

10

J/ Vaidyeshwara College,  Jaffna.

https://rkmceylon.blogspot.com/2025/10/vaidyeshwara-college-jaffna-swami.html

27-10-2025

11

Ramakrishna Mission, Colombo, Ashrama Hall.

https://rkmceylon.blogspot.com/2025/10/personality-development-programmes-in.html

31-10-2025 

 

12

Swami Vivekananda Day in Bharathi Vidyalayam, Kilinochchi.

https://rkmceylon.blogspot.com/2026/03/swami-vivekananda-day-in-bharathi.html

05-03-2026


Tuesday, October 7, 2025

Swami Vivekananda Day Personality Development Programmes - Objectives


 

சுவாமி
விவேகானந்தர்
தினம்
ஆளுமை வளர்ச்சி நிகழ்வுகள்





Swami Vivekananda Day 
Personality  Development Programme 
Objectives

  1. Personality Development.
  2. Man Making & Character Building Education.
  3. Cultural Improvements.
  4. Making Human Values part of Daily Life.
  5. Self-Sacrifice & Service to Man.
  6. Drugs & Alcohol Awareness.
  7. UN Global Goals & Individual Responsibilities
பொருளடக்கம் - Table of Contents
Personality Development Programmes



Role Model Swami Vivekananda



By any measure, Swami Vivekananda had a multifarious and multidimensional personality. 
He was a great saint, thinker, scholar, educationist, organiser, nationalist, traveler, writer, poet, musician, ambassador of Indian Culture to the West, and what not!

சுவாமி விவேகானந்தர் - ஆளுமை வளர்ச்சிக்குரிய பாடல்கள் 

'கல்வி என்பது வெறும் தகவல்களைத் திரட்டுவதல்ல,
மாறாக பண்பு நலன்களை வளர்ப்பது' 
   சுவாமி விவேகானந்தர்

மனித நேயத்தையும், ஆன்ம நேயத்தையும் உள்ளடக்கிய ஓர் மனித மேம்பாடே அனைத்திற்கும் தீர்வாகும்.

வெறும் பொருளாதார மேம்பாடு மட்டுமே இலக்காகக் கொண்டால், மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் சுயநலம், பேராசை, போட்டி, பொறாமை ஆகிய மிருக உணர்வுகளைத் தட்டி எழுப்பும் பேராபத்தில் முடியும்.

சுவாமி விவேகானந்தரின் கூற்றின்படி மனிதன் மகத்தானவன், இறைவனின் படைப்பிலேயே உயர்வானவன். அவன் விதியை அவனே நிர்ணயிக்கின்றான். அனைத்துத் திறனும் அவனுள் ஏற்கனவே உள்ளது. அவன் எதுவாக விரும்புகின்றானோ, அவன் அதுவாகவே ஆகின்றான்.

மாணவர் வள முன்னேற்ற  நிகழ்வுகள் நோக்கம் 

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஐந்து முக்கிய குணங்களை பின்பற்ற வேண்டும்.
  1.  உண்மை பேசுவது,
  2.  கடவுளிடம் நம்பிக்கை கொள்வது, 
  3. வாழ்வில் அப்பழுக்கற்ற தன்மை,
  4. சுயநலமின்மை 
  5. சுயநலமற்ற சேவை.
 இந்த ஐந்து குணங்களும் ஒரு மனிதனுக்குத் தன் வாழ்வில் உன்னதத்தைப் பெற்றுத் தரும்.

அரிதான இம்மனிதப் பிறப்பை அலட்சியம் செய்யாமல், பொறுப்போடு வாழ்ந்து தன்னையும் உயர்த்திக்கொண்டு, தன்னைச் சுற்றியுள்ள இயற்கையையும் பேணிக்காத்து, ஒரு புதிய இயல்பு உருவாக காரணமாக இருப்பதே விவேகமாகும்.


நிகழ்ச்சிகளை நடத்துவதற்குரிய
ஆசிரியர்களுக்கும் தொண்டர்களுக்குமான வளங்கள்


எது சிறந்த கல்வி தெரியுமா? – சுவாமி விவேகானந்தர்

மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.

நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று செல்கிறோம். அந்த புவியீர்ப்புச் சக்தி எங்காவது ஒரு மூலையில் நியூட்டன் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.

நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை.

மனஉறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, (ஆக்கபூர்வமாகப்) பயன் தரும் வகையில் அமைவதற்கு உரிய பயிற்சிதான் கல்வியாகும்.

வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். உறுதியான நல்ல ஒழுக்கத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆர்வத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். சிங்கம் போன்ற மனஉறுதியை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுவதாகக் கல்வி இருக்க வேண்டும். கல்வி என்பது ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். கல்வி, ஒருவன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

*****************************************


சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களின் மீதான நம்பிக்கை:

சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். இளைஞர்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால்தான், “100 இளைஞர் களை தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார்.

விவேகானந்தரின் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை தங்களின் மனத்தில் கொண்டு, செயற்கரிய செயல்களை செய்பவர்களாக மாணவர்கள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும்.

ஒவ்வொரு இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர்.

சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே நோக்கம். இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை.

பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.





நமது உலகத்தை உருமாற்றுதல்
 - Transforming our world
அடிப்படை தியாகமும் சேவையும்
 - Foundation is Sacrifice & Service
  • ஏழ்மை இன்மை: எல்லா இடங்களிலும், எல்லா வகைகளிலுமான ஏழ்மையை ஒழிக்க வேண்டும்.
  • பசி இன்மை: பசியை ஒழித்தல், பட்டினியை விரட்டுதல், உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்து மேம்பாட்டையும் எய்துதல் மற்றும் நிலையான, வளங்குன்றா வேளாண்மையை ஊக்குவித்தல்.
  • நல்ல ஆரோக்கியம்: எல்லோருக்கும், எல்லா வயதிலும், நலம்குன்றா உயிர்வாழ்வை உறுதிசெய்தலும், எல்லாருக்கும் எல்லா வயதிலும் நலவாழ்வை முன்னெடுத்தலும்.
  • தரமான கல்வி: யாவரையும் உள்ளடக்கிய, சமவாய்ப்புள்ள, சமத்துவமான, தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மற்றும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுதுமான கல்வி கற்றலுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்.
  • பாலின சமத்துவம்: பாலின சமத்துவம் அடைதல், மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தலும்.
  • தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்: எல்லோருக்கும் நீரும், துப்புரவும் கிடைக்கச் செய்தலும் அவற்றை நீடிக்கத் தக்கவாறு சுகாதாரத்தின் நிலையான மேலாண்மை செய்தலும்.
  • புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி: எல்லோருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் புதுமையான முறை ஆற்றல் (எரிசக்தி) கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளுதல்.
  • நல்ல பணிகள் மற்றும் [பொருளாதாரம்|பொருளாதாரங்கள்]]: எல்லோருக்கும் நிலையான, யாவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான, நீடிக்கத்தகு பொருளாதார வளர்ச்சி, முழுமையான, ஆக்கவளம் கொண்ட, கண்ணியமான பணி.
  • புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு: தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கிய மற்றும் வளங்குன்றாத் தொழில்மயமாதலை முன்னெடுத்தல், புதுமையாக்கத்தைப் பேணி வளர்த்தல்.
  • சமமின்மையை குறைத்தல்: நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான சமமின்மையை, சமத்துவமின்மையைக் குறைத்தல்.
  • நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்: நகரங்களையும், மனித சமூகங்களையும், குடியிருப்புகளையும் எல்லாரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பானதாக, தாங்கும் திறன் கொண்ட, நீடிக்கத்தக்கனவாக ஆக்குதல்.
  • வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்: நிலையான, நீடிக்கத்தகு முறையிலான நுகர்வு மற்றும் உற்பத்தியை, உற்பத்தி வடிவங்களை உறுதிசெய்து கொள்ளுதல்.
  • வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்.
  • நிலைப்பாடுடைய பெருங்கடல்கள்: பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களைப் பேணுதலும், வளங்குன்றா வளர்ச்சிக்காக அவற்றை நீடிக்கத்தகுந்த விதத்தில் பயன்படுத்தலும்.
  • நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு: நில சூழலியல் அமைப்புகளை பாதுகாத்து, மீட்டமைத்து, அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல், நீடிக்கத்தக்கவாறு காடுகளை நிலைப்பாடான முறையில் நிர்வகித்தல், பாலைவனமாதலுக்கு எதிராகப் போரிடல், நிலச் சீர்கேட்டைத் தடுத்து மீட்டமைத்தல், மற்றும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல்.
  • அமைதி மற்றும் நீதி: நிலையான, வளங்குன்றா வளர்ச்சிக்காக அமைதியான, யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா நிலைகளிலும் சிறப்பான, பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குதல். செயல்திறமிக்க, பதிலளிக்கும் பொறுப்புடைய, யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துதல்.
  • நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள்: நிலையான அபிவிருத்திக்காக செயல்பாட்டு முறைகளை பலப்படுத்துதல், வளங்குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தல்.

சுவாமி விவேகானந்தரின் பன்முகங்களை விவரிக்கும் வகையிலான கட்டுரைகள்


Ramakrishna Mission, Colombo.

Current A/c No. 009010001222

SWIFT CODE: HBLILKLX
Bank Code 7083
Branch Code 009

Hatton National Bank Ltd,
Wellawatta Branch, 100, 102, Galle Road,
Colombo 6.

For more information contact rkmcey@gmail.com

Donations can be sent to the following bank account for organizing programmes in Schools.

The following Costs are involved to conduct a programme.

  • Travelling & Transport
  • Printing Pamphlets
  • Gift of Books
  • Educational Materials
  • Refreshments to Participants

Ramakrishna Mission (Ceylon Branch)
40, Ramakrishna Road, 
Colombo 6.
Email - rkmcey@gmail.com
Phone - 0094-11-2588253




Sri Ramakrishna’s Times

Sri Ramakrishna appeared on the scene in Calcutta which was then the capital of British India, at a time when Bengalees were taking to English education on a large scale, had developed doubts about our religion, were attracted to reform, and generally abandoning their age old ‘dharma’ and taking to secular ways. Sri Ramakrishna was born in 1836- the year in which Macaulay’s scheme of education was introduced in India!





Monday, October 6, 2025

மாணவர் ஆற்றல்களை வளர்க்கும் பாடல்கள்



Songs for Students
to manifest
the powers within.

பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா


ஒருமுகமாய் மனம் குவித்தல் ஆற்றல் பொங்கியெழும்
அதை ஒரு செயலில் திருப்பிவிட்டால் வெற்றி நிற்சயம்
உறுதியோடு உழைக்கும் தன்மை உன்னிடம் இருந்தால் - நீ
நினைப்பதெல்லாம் நிறைவேறும் நம்பிக்கைகொண்டால் - வெற்றிவேண்டுமா

கடலைக்குடிக்கலாம் காற்றை நிறுத்தலாம்
உன் மனதை அடக்கினால் இந்த உலகைவெல்லலாம்
இறப்பை தடுக்கலாம் மீண்டும் பிறக்க மறுக்கலாம் - இந்த
இரவும் பகலும் இல்லா உலகில் என்றும் மகிழலாம் ---------- வெற்றிவேண்டுமா

வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் இருக்கு
அதில் கற்றுக்கொள்ளும் பாடம்தானே வீரனுக்கழகு
தோல்விகண்டால் வாழ்க்கையில் நீ துவண்டுவிடாதே - அதில்
பாடம் கற்று மீண்டும் முயல மறந்துவிடாதே ------------------ வெற்றிவேண்டுமா

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் பாடம்கற்றதெங்கே
தோல்விப்படிகள் ஏறிப்பெறா வெற்றிமாலையெங்கே
பிறந்தகன்று எழுந்தபோது விழுந்ததில்லையா - அது
மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து ஓடவில்லையா -- ---------- வெற்றிவேண்டுமா

இல்லை என்ற வார்த்தை தன்னை என்றும் சொல்லாதே
இயலாது என்று கூறி நீயும் படுத்துவிடாதே
எல்லையில்லா வலிமையெல்லாம் உனக்குள்ளிருக்கு - நீ
காலம் இடம் கடந்தவன் இதை மனதில் நிறுத்து --------------- வெற்றிவேண்டுமா

வெற்றிதரும் ஆற்றல்யாவும் உனக்குள்ளிருக்கு
அதை பெற்றுத்தரும் சாவி உந்தன் மனதை அடக்கு -----------வெற்றிவேண்டுமா



பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

மனிதா நீ மகத்தானவன் மண்ணில் பரம்பொருளின் உருவானவன்
பாரதத்தாய் பெற்றமகன் பண்பாட்டில் சிறந்தமகன்
வரலாற்றை உருவாக்கும் தலைமகன் நீ மனிதா நீ ---- மனிதா நீ


மனம்வைத்தால் மலைகளுமுன் கைகளுக்குள் அடங்கிவிடும்
இமைப்பொழுதில் நதிகளுமே திசைமாறி பாய்ந்துவிடும்
விண்மீனும் உன்கழுத்தில் அணியாகமாறிவிடும்
மண்ணுலகில் உன்சுவடு வரலாறாய் ஆகிவிடும்
அழிவற்றவன் நீ......
அழிவற்றவன் நீ உந்தன் உயிரினிலே நின்றுலவும்
பரம்பொருளின் மகத்துவத்தை உணர்ந்திடுவாயே - மனிதா நீ... -------

நம்பிக்கை நம்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை கொண்டாலே
ஆற்றல்களும் ஊற்றெனவே பொங்கியெழும்
மரணமற்ற பிறப்பற்ற எல்லையில்லா ஆன்மாநீ
மனதுவைத்தால் உலகமே உன்காலடியில் வந்துவிழும்
உண்மையிலே நீ.....
உண்மையிலே நீ பெரும் சக்திகளின் முழு உரு நீ
குரல்கொடுத்து புதுயுகத்தை அழைத்திடுவாயே - மனிதா நீ.....

சிங்கத்தின் இருதயத்தை வலிமைபெற தியானம்செய்வாய்
ஜீவனிலே சிவனைக்கண்டு தொண்டதனை செய்திடுவாய்
துணிவுகொண்ட உள்ளத்துடன் சிங்கமென எழுவாய்நீ
மாயைதன்னை போக்கியுந்தன் மகத்துவத்தையுணர்வாய்
முயன்றாலே நீ...
முயன்றாலே நீ உந்தன் முயற்சியெனும் பெரும்பலத்தால்
மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே - மனிதா நீ...


பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

க்ஷாத்ர வீர்ய பிரம்மதேஜ மூர்த்தீமான் வந்தார்
காற்றில் வானில் ஓங்கி ஒலித்திட அபயம் அபயம் என்றார்
ஆறுதல் கிடைத்தது பயந்திட்ட மக்களுக்கு

ஆனந்தம் பிறந்தது அடங்கிட்ட ஜீவனுக்குள்
எழுந்திரு என்றொரு முழக்கத்திலே
கலைந்தது மயக்கம் இதயத்திலே
இனியும் யாருக்கு பயந்துகொண்டாய் - துச்ச
கனவை உதறி நீ எழுந்து நிற்பாய் ------ க்ஷாத்ர

இறப்பில்லா இறைவனின் பிள்ளைகள் நாம்
இறப்பென்று இனியொன்று நமக்கில்லைதான்
வேதரிஷிகளின் பரம்பரைனாம் - அந்த
தேவதேவியர் உறவுகள்னாம்
இனியும் யாருக்கு பயந்துகொண்டாய் -
துச்ச கனவை உதறி நீ எழுந்து நிற்பாய் ------- க்ஷாத்ர

தொண்டுக்கும் துறவுக்கும் கொடிபிடிப்பாய்
அச்சமின்றி ஆகாயத்தை நீ துளைப்பாய்
உண்டாகும் உலகுக்கே உபகாரம் - என்றும்
உன்தோளில் நிற்கும் அவர் அன்புக்கரம்
இனியும் யாருக்கு பயந்துகொண்டாய் -
துச்ச கனவை உதறி நீ எழுந்து நிற்பாய் ------- க்ஷாத்ர

ஆறுதல் கிடைத்ததுபயந்திட்ட மக்களுக்கு
ஆனந்தம் பிறந்தது அடங்கிட்ட ஜீவனுக்குள்
எழுந்திரு என்றொரு முழக்கத்திலே
கலைந்தது மயக்கம் உலகத்திலே
இனியும் யாருக்கு பயந்துகொண்டாய் - துச்ச
கனவை உதறி நீ எழுந்து நிற்பாய் ------- க்ஷாத்ர

பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

நீயே உந்தன் விதியை படைக்கும் ஆண்டவன் ஆகின்றாய்
நினைத்தால் அதனை மாற்றியமைத்திட தகுந்தவனாகின்றாய்

நாமே படைக்கும் விதியைத்தவிர வேறொரு விதியில்லை
இதை நாமே உணர்ந்தால் பிறர்மேல் பழியை சுமத்திடவழியில்லை
எண்ணும் எண்ங்கள் நாம் பேசும் வார்த்தைகள்
செய்யும் காரியங்கள் எல்லாம் விதியின் காரணங்கள் ------ நீீயே

யாரோபடைத்த விதியை மாற்ற நம்மால் முடியாது
நாமே படைத்ததை நாமே அழித்திட தடைகள்கிடையாது
கடந்தகால செயல்களின் விளைவே விதியாய் வாய்த்தது
நிகழும்கால செயல்கள் நாளை விதியாய் வருகிறது - இன்று நிகழும்கால செயல்கள் நாளை விதியாய் வருகிறது --------- நீீயே

விதியே என்று வீழ்ந்தவனுக்கு கதியே என்றும் கிடையாது
விதியை வெல்லும் வல்லமை உனக்குள் உணர்ந்தால் துயரேகிடையாது
சோம்பல் வாழ்க்கை வாழும் வீணர்கள் விதியை நம்பிடுவார்
சுறுசுறு என்று இயங்கும் இளைஞர்கள்விதியை வென்றிடுவார் --- நீீயே

ஒன்றாய் புறப்படுவோம் நன்றாய் புறப்படுவோம்
நாமே நமது விதியை படைக்க இன்றே புறப்படுவோம் --- நீீயே



பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

வீரம்தா விவேகம்தா வெற்றிக்கனியைத்தா
பக்தி சக்தி முக்திதா பரமநிலையைத்தா

பரமசுகத்தைத்தா ---------------------------------------------------- வீரம்தா

கர்மசித்திதா கடமையுணர்வைத்தா
ஞானதியான யோகம்தா ஞான ஒளியைத்தா
ஞான அறிவைத்தா --------------------------------------------------- வீரம்தா

தியாகபுத்திதா திவ்விய வாழ்வைத்தா
ஜாதிபேதம் நீக்கித்தா தேசபக்திதா
தெய்வபக்திதா --------------------------------------------------------- வீரம்தா

அன்பைத்தா நல்லறிவைத்தா அடியில் சரணம்தா- உன்
அடியில் சரணம்தா
மரண பயத்தை நீக்கித்தா மண்ணில் உயர்வைத்தா என்னில் ஒளியைத்தா ----
--






பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

மனிதரெல்லாம் ஒரு குடும்பம்
அந்நியர் என்பவர் யாருமில்லை
அனைவரும் இறைவனின் பலபிள்ளை
பிரிவினை பகைமையை வென்றிடுவோம்
அகிலத்தை அன்பால் இணைத்திடுவோம் - ------- உலகமெல்லாம்


மொழி நிற மத பேதம் கடந்திடுவோம்
புது சமுதாயத்தை படைத்திடுவோம்
பசி பிணி அறியாமை நீக்கிடுவோம்
இறை பணி இதுவென்று செய்திடுவோம் ------------ உலகமெல்லாம்

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்
இந்திய நாட்டினை உயர்த்திடுவோம்
வேற்றுமை அனைத்தையும் விலக்கிடுவோம்
ஒற்றுமையாய் என்றும் வாழ்ந்திடுவோம்-------------- உலகமெல்லாம்

பாரத பண்பாடு நம்தீபம்
பாருக்கெல்லாம் அது ஒளிவீசும்
நாம் அதை வளர்த்திட உழைத்திடுவோம்
நாளும் இறைவனை துதித்திடுவோம் -------------------- உலகமெல்லாம்




பாடகர்: சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகாராஜ் அவர்கள்.

ஜீவனெல்லாம் இறைவனென்ற ஞானத்திலே
நாம் ஜீவசேவைசெய்யவேண்டும் வாழ்க்கையிலே
நாளும் மனிதக்கடவுளை நாம் போற்றிநிற்போமே
பல நாமரூபபேதம் நீக்கி பூஜைசெய்வோமே ------- ஜீவனெல்லாம்

கல்லுக்குள்ளே கடவுளை நாம் தொழுததுபோதும்
நம் கண்ணெதிரில் வாழும் அவனை தொழுதிடவாரும் --- ஜீவனெல்லாம் -
பசிவயிறாய் காட்சிதந்தால் உணவளித்திடுவோம்
பனிக்குளிரில் நடுங்கிநின்றால் உடையளித்திடுவோம்
பாமரனாய் தோன்றிவந்தால் படிப்பளித்திடுவோம்
தன்பகுத்தறிவால் உயர்வதற்கு வழிவகுத்திடுவோம்-------- ஜீவனெல்லாம்

கண்ணிழந்தும் காலிழந்தும் தோன்றும் மனிதனே
நம் கண்ணெதிரில் வாழ்ந்துவரும் தேவதேவனே
மனிதவடிவில் வாழும் இவர்கள் மகாதேவனே
இந்தப்புனித ஜீவ தேவைகளை பூர்த்தி செய்வோமே------ ஜீவனெல்லாம்

ஊனக்குறை காட்டிவந்தால் அன்புகாட்டுவோம்
அவர் மனநிறைவை பெறுவதற்கு ஊக்கமூட்டுவோம்
மனதுக்குள்ளே தன்னம்பிக்கை பாலை ஊற்றுவோம்
அவர் மனிதனாக நிமிர்ந்துவாழ பாதை காட்டுவோம் ----- ஜீவனெல்லாம்

வித்தைக்கோர் ஆலயம் எங்கள் வித்யாலயம்
இது ஜீவசேவை செய்துவரும் தேவ ஆலயம்
விவேகவழியில் கல்விஅளிக்கும் நவீன குருகுலம்
அகிலஉலகம் இணைந்து நடத்தும் தர்மஸ்தாபனம்----- ஜீவனெல்லாம்



மனதில் உறுதி வேண்டும் - - மஹாகவி பாரதியார்

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

 

Friday, March 21, 2025

Motivational Programmes for Students by Swami Vimurtanandaji - August 2024




Colombo - Ashrama Hall, Ramakrishna Mission -11-8-2024.

Urumpirai - Ramakrishna Mission Welfare Centre, Urumpirai - 18-8-2024.

Jaffna - Karunai Illam - 20-08-2024 (Karunai Girls' Child Development Centre).

Visuvamadu - Swami Vivekananda Educational Centre 17-8-2024.




Urumpirai - Ramakrishna Mission Welfare Centre, Urumpirai - 18-8-2024





Jaffna - Karunai Illam - 20-08-2024  (Karunai Girls' Child Development Centre)








Visuvamadu - Swami Vivekananda Educational Centre 17-8-2024









புத்தக வாசிப்பின் மகிமை – Greatness of Reading Books

புத்தகங்களின் முக்கியத்துவத்தின் சில சிறப்புகள்: அறிவு வளர்ச்சி: புதிய தகவல்களையும், உலகளாவிய விஷயங்களையும் அறிய உதவுகிறது. மன அமைதி: கவலைகள...